"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
17 செப்டம்பர் 2016

வெளிநாட்டு வாழ்கை

0 comments
விடைக்கொடுத்து ஊருக்கு வருகிறென்

இறுகிப்போன இமையும்
பாரத்தை இறக்கிவைத்து,
உதடுகள் இரண்டும்
உள்ளுக்குள்ளேச் சிரித்துக்கொண்டு,
காத்திருக்கும் பாதமும்
வியர்த்திருக்கும்
உள்ளங்கையும் உனக்காக,
ஊருக்குப்போகும் அந்த நாளுக்காக!

கைதுச் செய்தத்
தனிமைக்கு விலங்கிட்டு,
தூங்காமல் தவித்த
இதயத்திற்குத்
தாலட்டுப்பாடி,
வாடித்தவிக்கும் உனக்குப்
புன்னகையைச் சூட வருகிறேன்!

மூட்டையை
முடிச்சுப் போட்டுக்கொண்டு
கட்டவிழ்க்க வருகிறேன்,
கவலைகளைக்
கரையேற்ற வருகிறேன்,
உன்னைத்தேடி வருகிறேன்

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி