"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
30 ஜூலை 2011

நினைவலைகள்: ரேவடியும் குள்ளநரிக் கூட்டமும்

0 comments
அந்த காலத்தில் உள்ள வீதிகள் மிகவும் அற்புதமாகவும் அழகாகவும் காணப்படும். நமது ஊரால் மறக்க இயலாத இடம் ரயில்வே ஸ்டேஷன். பசுமையான, அமைதியான இடம். படிக்கும் காலங்களில் அங்கே தான் சென்று படிப்பது. எதிரே உப்பளம் மிகவும் குளிர்ச்சியான பகுதி. அப்படியே சற்று நகர்ந்தால் ரேவடி - அதாவது ரயில்வே கேட்டை தாண்டியதும் கடலுக்கு செல்லும் வழியில் முன் பகுதியே அப்பகுதியாகும்.

குதிரை வண்டியின் சலங்கை சத்தம் ஒரு பக்கம், இயற்கை வளங்கள், தாவரங்கள், நீரோடைகள், குளிர்ந்த காற்று ஒரு விதமான நிசப்தம், காதுகளுக்கு இனிமையான பறவைகளின் ஓசைகள், இப்பாதைகளில் ஓடிக்கொண்டு இருக்கும் புகைவண்டியின் சப்தங்கள், உப்பளங்களிருந்து சரக்குகளைச் சுமந்து செல்லும் கழுதைகளின் கூட்டங்கள் மற்றும் லாரிகளும். இவைகளுக்கு இடையில் கடலில் இருந்து நமது மார்க்கெட் நேரத்தை அடைய மீன்களை சுமந்து ஓடிக் கொண்டு இருக்கும் மீனவக் கூட்டங்கள், காதுகளைப் பதம் பார்க்கும் விதமாக கடல் அலை ஓசைகள், இத்தனை இயற்க்கையையும் தாண்டிச் முன்னேறி செல்லும் எங்கள் கூட்டம். மாடுகள் காணப்பட்டதும் வேட்டை…

தாகம் எடுக்க சுற்றிலும் பார்த்தாலும் உப்பு தண்ணீர் தான் கிடைக்கும். அதில் ஒரு நண்பருக்கு கண்ணில் பட்டது தென்னந்தோப்பு. தேங்காய் இளநீர் குடிக்கலாம் என திருட முயன்ற நேரத்தில் துரத்தியது நாய்கள் கூட்டம். பயம் மற்றும் பசியில் பிடித்த ஓட்டம் ரயில்வே கேட்டை அடைய கண்ணில் பட்டது ஓர் அழகிய ரோஜா கூட்டம் போல சிவந்த கனிந்த நிலையில் சப்பாத்தி கள்ளிச் செடியில் உள்ள பழம் மிகவும் சுவையாக இருந்தது. நேரம் சென்று கொண்டே இருக்க அழைப்பு ஓசை (மஃரிப் பாங்கு) கேட்க, அதனுடன் ஊடுருவி வருகிறது அதிரை பேரூராட்சியின் மாலை 6 மணி சங்கு ஓசை… வீடு சென்றதும் எங்கள் முதுகிலும் விழுந்தது அடியோசை…

பாவம்! இன்றைய இளைய தலைமுறைகளை உங்கள் தெருவில் ஒரு மாடு, ஆடுகளை காண முடியுமோ!”

குள்ள நரிகள் கூட்டம் சேர என்ன செய்வது என சிந்தனையில் இருக்க, காதில் ஒரு சப்தம். ஆம், புகைவண்டியின் நீண்ட ஒசை. உடனே உருவாகியது தான் ரயில் விளையாட்டு. 50-60 மீட்டர் நீளம் உள்ள கயிறு எடுத்துக் கொண்டு இரண்டு முனைகளையும் இணைத்தால் ரயில் ரெடி. இவ்விளையாட்டால் ஒரே ஓட்டம் தான். உடல் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் சிறந்த உடற் பயிற்சியாகவும் தேனீயாக பறக்கவும் முடிந்தது அந்த வயதில்.

பாவம்! இன்றைய இளைய தலைமுறைகளை இந்த விளையாட்டைப் பற்றி யார் கூறுவர்?

டேய்…. நாளைக்கு பள்ளிக்கூடம் லீவு எங்கே போகலாம்…? ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு வருகிறது தொழுகைப் பள்ளிக்கு அருகில் அமைந்து இருக்கும் குளமும் அதன் பின்புறம் அமைந்து இருக்கும் விளையாட்டு மைதானமும். பட்டம் பறக்க விடுவது, எவருடைய பட்டம் மிக உயரத்தில் பறக்கும் என போட்டிகள் நிறைந்த மைதானமாக காட்சி தரும். அன்றைய நாட்களில், அதிகாலை தொடங்கி உச்சி வரை நீடிக்கும் விளையாட்டுப் போட்டிகள் கண் மூடிதனமாக விளையாடப்படும்.

அறியா அந்த பருவத்தில். விளையாட்டு முடிந்து வரும் வழியில் ஜில் எனக் காற்றோடு மிக நீண்ட சுத்தமான வெட்டி குளம். அதில் பெரும்பாலும் தண்ணீர் இருக்கும். எருமை மாடுகள் குளத்தில் உள்ள பாசிகளை வேட்டையாடிக் கொண்டு இருக்கும். மாடோடு மாடாக எங்கள் கூட்டமும் இறங்க - பந்து எரிந்து விளையாடல், நீச்சல் போட்டிகள் என…. அதிகாலை வீட்டை விட்டு வெளியேறிய இப்படை வீட்டை அடைந்ததும் முதலில் உம்மாவிடம் அன்பு சாப்பாடு (அடிதான்). பிறகு தான் வயிற்றுக்கு கிடைக்கும். முடிந்ததும் வேட்டியில் (கைலி) கை-வாய்களை துடைத்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி மாலை விளையாட்டு தொடக்கம்.

பாவம்! இன்றைய இளைய தலைமுறை இந்த விளையாட்டைப் பற்றி எப்பொழுது அறிவது?


தொடரும்.....


பதிப்பு : அதிரை எக்ஸ்பிரஸ்
ஆக்கம் : எம். அக்பர் அலி (அபுதாபி)

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி