"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
19 மார்ச் 2012

கொடூரமாக கொல்லப்படுவதையாவது தடுத்து நிருத்தலாம் துஆ

0 comments


ஏகஇறைவனின் திருப்பெயரால்....

إِذْ تَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ أَنِّي مُمِدُّكُم بِأَلْفٍ مِّنَ الْمَلآئِكَةِ مُرْدِفِينَ {9}

8:9. நீங்கள் உங்கள் இறைவனிடம் உதவி தேடிய போது ''உங்களுக்குப் பின்னால் அணிவகுக்கும் ஆயிரம் வானவர்களின் மூலம் நான் உங்களுக்கு உதவுபவன்'' என்று உங்களுக்குப் பதிலளித்தான்.


اللهم عليك ببشار الاسد

அல்லாஹூம்ம அலைக்க பஸார் அல் அசாத்.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கடந்த ஒரு வருடமாக சிரியாவில் நடைபெற்று வரும் கலவரம் இதுவரை முற்றுப் பெறவில்லை. முற்றுப்பெறுவதற்கான எந்த நடிவடிக்கையையும் அந்நாட்டு அதிபர் மேற்கொண்டதாகத் தெரியவில்லை, உலகநாடுகளின் பாதுகாப்பு சபை என்று சொல்லக் கூடிய ஐ.நா.வும் கலவரத்தை ஒடுக்க உருப்படியான எந்த முடிவையும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை.


அதிபர் பதவியிலிருந்து இறங்க மறுத்தாலும் நாட்டின் குடிமக்கள் அநியாயமாக இனவெறிப் பிடித்த ராணுவத்தினரால் கர்ண கொடூரமாக கொல்லப்படுவதையாவது தடுத்து நிருத்தலாம் மாறாக தாமே ராணுவத்தைத் தூண்டிவிடும் இனவெறிப் பிடித்தவராக பஸார் அல் ஆசாத் இருப்பது மிகுந்த கவலை அளித்து வருகிறது.




கடந்த ஒரு வருடமாக இதுவரை அநியாயமாக அரசுப் படைகளால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை சுமார் 8500 ஐத் தாண்டி விட்டதாக உலக ஊடகங்கள் கூறினாலும் அதை விட இரண்டு மடங்குகள் அதிகமாக இருக்கலாம் என்றே பொதுவான மக்கள் கணிக்கின்றனர்.


நாட்டு மக்கள் எக்கேடு கெட்டும் தொலையட்டும் தன் வீட்டு மக்கள் பாதுகாப்பாக இருந்தால் போதும் என்றுக்கருதி கொலைவெறித்திட்டம் தீட்டப்படுவதற்கு முன்பே தனது காதல் மனைவி (இங்கிலாந்தைச்சேர்ந்த) அஸ்மாவையும் பிள்ளைகளையும் தனி விமானத்தில் இங்கிலாந்துக்கு அனுப்பிவிட்டார்.


கலவரத்தின் பிண்ணனி !!!

இயற்கை எழில் கொஞ்சும் விளைச்சல் மிக்க பூமி சிரியா. இதில் தேரா எனும் மாகாணம் அதிக அளவில் விளைச்சல் செய்யக் கூடிய விவசாய பூமியாகும்.

திடீரென மழை குறைந்ததால் ஏற்பட்ட தண்ணீர் பற்றாக்குறையுடன் ஈராக் அகதிகள் பெருமளவு தேராவில் குடியேறியதால் விவசாய பூமியாகிய தேரா வறண்டு பஞ்சம் ஏற்பட்டது. தேராவின் காலி நிலங்களை விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விற்று கிணறுகள் தோண்ட கடனுதவி வழங்கும் திட்டத்தை சிரிய அரசு வகுத்து தேராவின் கவர்னர் ஃபைசல் அல்கல்தூமிடம் கொடுக்கப்பட்டது. இத்திட்டத்தில் அதிகமான நிலங்களை தனது வர்க்கத்தினருக்கே (ஷியாக்களுக்கு) ஃபைசல் அல்கல்தூம் தாரை வார்த்தார் இதை அரசும் கண்டு கொள்ள வில்லை.


தேரா நகர் சன்னி முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழக் கூடிய பகுதி என்பதால் இந்த அநீதியை நினைத்து அதிகம் சிந்திக்கும் நிலைக்கு தேரா வாழ் சன்னி முஸ்லீம்கள் தள்ளப்பட்டனர். இது தேராவில் மட்டும் நடக்கும் பிரச்சனை அல்ல ஒட்டு மொத்த சிரியாவின் நிலையும் இது தான். வெறும் 12 சதவிகிதத்தினர் மட்டும் (ஷியாக்கள்) வாழும் சிரியாவில் அதிபர் பொறுப்பிலிருந்து அரசின் உயர் மட்டப் பொறுப்புகள் வரை அவர்களே கோலோச்சுகின்றனர். 88 சதவிகிதத்தினர் வாழும் சன்னி முஸ்லீம்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கே அரசு அதிகாரங்களில் அமர்த்தப்படுகின்றனர்.


தேராவின் கவர்னர் ஃபைசல் அல்கல்தூமினால் ஷியாக்களுக்கு அதிகமான நிலங்களை தாரைவாரத்த அநீதி வெளிப்படையாக நடந்த பொழுது தான் துனிஷியாவில் புரட்சி வெடித்தது.

துனிஷியாவின் புரட்சி சிரிய மக்களை சிந்திக்கத் தூண்டியது அதன் வெளிப்பாடு தான் ஆட்சி மாற்றம் கோரி மார்ச் 15, 2011ல் தேராவில் முதன் முதலில் போர் கொடி உயர்த்தப் பட்டு பஸார் ஒழிக, ஈரான் ஒழிக, ஷியாக்கள் ஒழிக எனும் கோஷம் விண்ணதிரச்செய்தது. இதுவே சிரியா முழுவதும் பிரதிபலித்தது.



இந்த நேரத்தில் ஆட்சியை விட்டு இறங்கினால் கண்டிப்பாக அதிபர் பதவிக்கு சன்னி ஒருவர் தேந்தெடுக்கப்படுவார் என்பதை திட்டவட்டமாக அறிந்த ஈரான் பஸாரை கீழிறங்க விடாமல் முட்டுக் கொடுத்தது.


நுனிப்புல் மேயும் ஐநா.
ஆட்சி மாற்றம் கோரப்பட்ட மற்ற வளைகுடா நாடுகளின் விஷயத்தில்
அதிக கவனம் எடுத்துக் கொண்ட ஐ.நா. சிரியா விஷயத்தில் மட்டும்
நுனிப்புல் மேய்வதற்கு காரணமென்ன ?


  • இஸ்லாத்தை சரியான வடிவில் பேணக் கூடிய சன்னி முஸ்லீம்களை இஸ்லாத்திற்கு அறவே சம்மந்தமில்லாத ஷியாக்கள் அரசு துணையுடன் கறுவறுப்பது அவர்களுக்கு திருப்தியை அளிக்கிறது.
  • நேட்டோப் படைகளை சிரியாவுக்குள் அனுப்பி கலவரத்தை ஒடுக்க நினைத்தால் சிரியா இஸ்ரேலுக்கு மிக அருகில் இருப்பதால் ஈரானும் சிரியாவுக்கு மிக அருகில் இருப்பதால் நேட்டோப் படைகளுக்கும் சிரியாவின் ராணுவத்திற்கும் இடையில் சண்டை மூண்டால் அது கண்டிப்பாக ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் சண்டை மூளும் அபாயம் ஏற்படலாம்.
  • சிரியா மீது ராணுவ நடிவடிக்கையை அமெரிக்கா மேற்கொள்ள நினைத்தால் பெரும் பூகம்பமே வெடிக்கும் என்று அப்டோபர் 31,2011 சன்டே டெலிகிராப்புக்கு பஸார் அளித்தப் பேட்டி தனது கள்ளக் குழந்தை இஸ்ரேல் விஷயமாக அமெரிக்காவை சிதிக்கத்தூண்டி இருக்கும். அதனால் இஸ்ரேலின் கைப்பாவை ஐ.நா சிரியாவில் நடந்தேறும் அப்பாவி மக்களின் மீதான அத்துமீறலை முடிவுக்குக் கொண்டு வர நடிவடிக்கையை மேற்கொள்ளாது.
  • ஐ.நா.சபை தூங்கிக் கொண்டா இருக்கிறது என்று உலகம் நினைத்து விடக்கூடாது என்பதற்காக அவ்வப்பொழுது பஸார் அல் ஆசாதை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றுவதும் கோபி அனானை பஸார் அல் ஆசாதை நேரடியாக சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்த அனுப்பி உள்ளதுமாகும்.
  • ஐ.நா, மற்றும் அரபு லீக்கின் பிரதிநிதியாக பஸாருடன் பேச்சு வார்த்தை நடத்த அனுப்பப்பட்ட கோபி அனான் மார்ச்12 அன்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கையில் ஷியா ராணுவத்தினரால் 63 நிராயுதபாணிகள் கழுத்தறுக்கப்பட்டு வீதி தோறும் பிணங்களாக குவிக்கப்பட்டனர். இதில் ஏராளமான பெண்கள் குழந்தைகள் அடங்குவர். இந்த வெறும் பேச்சு வார்த்தை எங்களை ஒன்றும் செய்யாது என்பதையே மேல்படி மனிதாபிமானமற்ற கொலைகள் உணர்த்துகின்றன.

பலவீனங்கள்.

துனிஷியா போராட்டமே சிரியாவின் போராட்டத்திற்கு உந்துதலாக அமைந்தக் காரணத்தால் துனிஷியா மக்களைப் போன்று சர்வாதிகார ஆட்சி ஒழிக என்ற கோஷம் மட்டுமே சிரிய மக்கள் எழுப்பி இருக்க வேண்டும் மாறாக ஷியா ஒழிக, ஈரான் ஒழிக, என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டதால் (இது ஆரம்ப காலத்தில் எழுப்பப்பட்டு அப்பொழுதே நிருத்தப்பட்டு விட்டாலும்) இதை உலக கவனத்திற்கு சிரியா எடுத்துச்சென்று இது சவுதி அரேபியாவின் சதி என்றும் இது ஆட்சி மாற்றத்திற்கான போராட்டம் அல்ல இது சன்னி - ஷியாக்களின் மோதல் என்றும் திசை திருப்பி விட்டது.


பஸாரின் சர்வாதிகாரத்தை நிறுத்துமாறு முஸ்லீம் நாடுகளின் கூட்டமைப்பாகிய அரபு லீக் பல தடவை கோரிக்கைளை முன் வைத்தும் எதற்கும் கட்டுப்படாத பஸாரின் போக்கை சவுதி அரேபியா வன்மையாக கண்டித்தது. பஸாரை கட்டுப்படுத்தத் தவறினால் அரபு லீக்கிலிருந்து வெளியேறப் போவதாக கடுமையான கன்டணத்தை அரபு லீக்குக்கு சவுதி அரேபியாப் பதிந்தது. இதையடுத்து நவம்பர் 10, 2011ல் கெய்ரோவில் அவசரமாக கூட்டப்பட்ட அரபு லீக்கிலிருந்து துரிதமாக சிரியா நீக்கப்பட்டதும் சிரியாவில் உள்ள சவுதி தூதரகம் ஷியாக்களால் அடித்து நொறுக்கப்பட்டது.

சிரியா தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பது ஒபாமாவின் தனி முடிவாகும் ஷியா காரரான பஸார் ஈரானுடன் இணைவதற்கு இதுவே உந்துதலாக அமைந்தது. அமெரிக்காவில் கூட்டப்பட்ட ஒரு ஊடகவியாளர்கள் சந்திப்பில் 2008ல் ஒபாமாவை எதிர்த்து நின்ற மெக்கெய்ன் சிரியாவில் ராணுவ நடிவடிக்கையை மேற்கொள்ளாதது ஏன் என்று ஒபாமாவிடம் கேள்வி எழுப்பிய பொழுது அனைத்து விதத்திலும் சிரியா தனிமை படுத்தப்படவேண்டும் ராணுவ நடிவடிக்கை எடுக்க முடியாது என்று பதிலளித்தார்.

சிரியா கலவரத்தை திரைமறைவில் அமெரிக்காத் தூண்டுவதாக பிப்ரவரி 4ல் விக்கிலீக்கஸ் அறிவித்திருந்தது ஒபாவின் இந்த பதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

இதன் பின்னரே ஈரான் துணிந்து சிரியாவின் டார்டஸ் துறைமுகத்தில் தனது போர் கப்பலை நிறுத்தியது இதை யாரும் தட்டிக்கேட்க முடியவில்லை.

அரபு லீக்கிலிருந்து சிரியா நீக்கப்பட்டப் பின்னரே சன்னி முஸ்லீம்கள் மீதான வன்கொடுமைகள் சிரிய ராணுவத்தினரால் கட்டவிழ்த்து விடப்பட்டன.

வேறுவிதமான நெருக்கடிகளை கொடுப்பதற்கு பதிலாக அரபு லீக்கிலிருந்து சிரியா நீக்கப்பட்டது ஷியா பிரிவைச் சேர்ந்த பஸாருக்கும் அவர்களால் நிரப்பட்ட ராணுவத்தினருக்கும் சன்னி முஸ்லீம்களை குறிவைத்து வேட்டையாடுவதற்கு வசதியாக அமைந்து விட்டது.

இறைவனிடம் கையேந்துங்கள்.
அரபு லீக்கிலிருந்து நீக்கப்பட்ட சிரியா ஈரானுடன் மிகவும் நெருங்கி விட்டதால் ஈரானிகள் பெருமளவு சிரியாவுக்குள் நுழைந்து ராணுவத்தினருடன் கை கோர்த்து விட்டதால் சன்னி முஸ்லீம்களின் நிலை நாளுக்கு நாள் சிரியாவில் கேள்விக் குறியாகி வருகிறது.


ஏற்கனவே இங்கிலாந்து. அமெரிக்கா தனது தூதரகங்களை சிரியாவில் மூடி விட்டதால் பிப்ரவரி 10 அன்று ஜெர்மனியும் தூதரகத்தை மூடிவிட்டது. எஞ்சி இருக்கும் வெளிநாட்டு தூதரகங்களும் இழுத்து மூடும் நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறது.


பிப்ரவரி 21 அன்று ஈரானின் போர் கப்பல் ஹோம்ஸ் நகரின் டார்டஸ் துறை முகத்தில் கொண்டு வந்து நிருத்தப்பட்டதையடுத்து அங்கிருந்து பெருவாரியாக பெண்கள், குழந்தைகள், முதியோர்கள், நோயாளிகள் அதிமமாக வெளியேறி வருகின்றனர்.

பிப்ரவரி 9 அன்று ஒரே நாளில் ஹோம்ஸ் நகரின் குடியிருப்புகள் மீது பீரங்கி தாக்குதல் நடத்தப்பட்டதில் 260 பேர் கொல்லப்பட்டும் 1000 த்திற்கும் மேற்பட்டோர் குற்றுயிரும் குறை உயிருமாய் ஆஸ்பத்திரிகளுக்கு அள்ளிக்கொண்டு செல்லப் பட்டுள்ளனர்.

மார்ச் 12ல் நடந்த 63 படுகொலைகள் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகள் அல்ல. வீடு, வீடாகப் புகுந்து ஒன்றிரண்டு குழந்தைகளுடன் தனித்திருக்கும் பெண்களை அவர்களின் குழந்தைகளை ஈவிறக்கமின்றி கொன்றுவிட்டு அவர்களை கற்பழித்து கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலில் படுகாயமடைந்து கிடப்பவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதற்கான ஆம்புலன்ஸ்கள் அரசு மருத்துவமனைகளில் அரசு மூலம் தடுக்கப்பட்டு விட்டது சொந்த வாகணங்களில் அல்லது அதிகமான வாடகைக்கு வாகணங்கள் அமர்த்தியும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கின்றனர் இதற்கு வசதி இல்லாதவர்களின் உயிர்கள் அவ்விடத்திலேயே கிடந்து இறக்கும் பரிதாப நிலை உருவாகிறது.

ஆங்காங்கே ஒன்றிரெண்டு உதவிப் பணிகளை செய்து வந்த செஞ்சிலுவை சங்கமும் மார்ச் 3ம் தேதி பாபா அம்ர் நகரில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களுக்கு சேவை செய்ய நுழைந்தபோது இனவெறிப் பிடித்த அரசுப் படையினரால் தடுக்கப்பட்டு விட்டது.

ஐ.நா.சபை துரிதமாக நடிவடிக்கை எடுத்து நேட்டோப் படைகளை சிரியாவுக்குள் அனுப்பினாலும் நேட்டோப் படையினர் முஸ்லீம்களை பாதுகாப்பதற்கு பதிலாக எதிராக மாறி விட்டால் இன்னும் நிலை மோசமாகலாம்.

மிகப் பெரிய நெருக்கடிக்கு உள்ளான சிரிய முஸ்லீம்களுக்காக சவுதிஅரேபியாவின் பள்ளிவாசல்களின் தொழுகைகளில் துஆ கேட்க ஆரம்பித்து விட்டனர்.

இனச்சுத்திகரிப்பு வியூகம் வகுத்து செயல்படுவதால் கொடுங்கோலன் பஸாரை இறைவா ! இன்றைய தினம் உன்னிடம் ஒப்படைக்கிறோம், அல்லாஹூம்ம அலைக்க பஸார் அல் ஆசாத் என்ற துஆவை தொழுகையின் ஸஜ்தாவிலும், தொழுகை முடிந்தப் பிறகும் கேளுங்கள்.


இவ்வாறு கேட்கப்படுகின்ற துஆவின் மூலமாகவே இறைவன் அவர்களுக்கு உதவுவான் கொடுங்கோலன் பஸாரை பதவியை விட்டு இறங்கி ஓட வைப்பான்.

போர் காலங்களில், அபாயகரமான சூழ்நிலையில் இறைவனிடம் பாதுகாப்புக் கோருவது எதிரிகளை செயலிழக்கக் கோரி இறைஞ்சுவது நபி வழி.

பத்ர் போருக்கு முன்
போர் நிகழ முன்னரே நபி(ஸல்) அவர்கள் அதிகமதிகம் அழுதழுது அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். அவர்கள் அழுததால் ஏற்பட்ட உடல் அசைவினால் அவர்களது தோலில் போட்டிருந்த போர்வை கீழே விழ, அபூபக்ர் (ஸல்) அவர்கள் அதை எடுத்து அவர்களின் தோலில் போட்டவாறு ஆறுதல் கூறுவார்கள். (முஸ்லிம்)

அகழ்ப்போருக்கு முன்
(அகழ்ப்போரின்போது ஒன்று திரண்டு தாக்க வந்த எதிர்) அணியினருக்குக் கெதிராக இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பிரார்த்தனை புரிந்தார்கள். அப்போது, 'இறைவா! திருக்குர்ஆனை அருள்பவனே! விரைவாகக் கணக்கு வாங்குபவனே! (சத்திய மார்க்கத்தை வேரறுக்க ஒன்று திரண்டு படையெடுத்து வந்துள்ள இந்த) அணியினரைத் தோற்கடிப்பாயாக! இறைவா! இவர்களைத் தோல்வியுறச் செய்து நடுக்கத்திற்குள்ளாக்குவாயாக!'' என்று பிரார்த்தித்தார்கள். 4115. அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார்

சிரியாவில் பெரும்பான்மையான மக்கள் சத்தியத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களை பின்பற்றுவோர் என்பதால் சத்தியத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களையும், அவர்களின் ஆருயிர் தோழர்களையும் மறுத்து இஸ்லாத்தை விட்டு வெளியேறிய ஷியாக்கள் பெரும்பான்மை முஸ்லீம்கள் வாழும் நாட்டை ஆளத் தகுதியற்றவர்கள்.

பஸாரின் தந்தை ஆசாத் ஒரு ராணுவ புரட்சியின் மூலம் ஆட்சியைப பிடிக்கும் வரை இன்றைய ஆட்சியாளர்களாகிய அலாவி வர்க்கத்தை (அலியை பின்பற்றுவோர்) சேர்ந்தவர்கள் சிரியாவின் மூலை முடுக்குகளில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே இருந்தனர்.
கொடுங்கோலன் பஸார் அல் ஆசாத் பதவியை விட்டு இறங்கி ஓட பிரார்த்தனை செய்யுங்கள், சிரியாவுக்குள் நுழைந்த ஈரானிகள் செயலிழக்க பிரார்த்தனை செய்யுங்கள்,

பிரார்த்தனை செய்வதை இலேசாக எண்ணி விட்டு வடாதீர்கள், மறந்து விடாதீர்கள் அதை அல்லாஹ் அங்கீகரிப்பான்.

8:9. நீங்கள் உங்கள் இறைவனிடம் உதவி தேடிய போது ''உங்களுக்குப் பின்னால் அணிவகுக்கும் ஆயிரம் வானவர்களின் மூலம் நான் உங்களுக்கு உதவுபவன்'' என்று உங்களுக்குப் பதிலளித்தான்.




وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன்-3:104.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி