"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
24 மார்ச் 2012

மரம் வளர்ப்போம்..

0 comments

என்னைச் சாய்த்துவிட்டு
நீ சாய்ந்துக்கொள்ளச்
சாய்மானம்;
வெட்டிவிட்டு;
நல்லவிலைக்கு விற்றுவிட்டுப்
பெற்றுக்கொள்வாய் வெகுமானம்!

காவலுக்கு நான்
உன் வீட்டுக் கதவாக;
இமைத் தட்டும் உறக்கத்திற்கு
உன்னைத் தாலாட்டும்
கட்டிலாக!

உன் குழந்தைகள்
கட்டிப்பிடித்து விளையாட
நண்பனாய்;
முத்தமிடும் வியர்வையை
முதுகில் தட்டிவிட்டு
வழியனுப்பும் நிழலாய்!

ஓட்டைவிழும்
ஓசோனுக்கு மாற்று
மருந்தாய்;
கூடுக்கட்டிக் குடிவாழும்
குருவிகளுக்கு வீடாய்!

கொடுத்தேப் பழகிய எனக்கு;
கேட்க வெட்கமாய்தான்
இருக்கிறது;
வெட்டுங்கள்;
வெட்டுவதற்கு முன்னே
ஒருச் செடியாவது நட்டுவிடுங்கள்!

ஆக்கம் : - யாசர் அரபாத்

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி