"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
21 செப்டம்பர் 2016

பாகிஸ்தானை அழைக்காதது ஏன்? நிருபரிடம் கபில்தேவ் ஆத்திரம்!!

0 comments

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் அடுத்த மாதம் 7ம் தேதி முதல் உலக கோப்பை கபடி போட்டி நடைபெற உள்ளது. இதில்  இந்தியா, தென்கொரியா, வங்கதேசம், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்பட 12 அணிகள் பங்கேற்கின்றன. இதற்காக அனூப்குமார் தலைமையிலான 14பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்கான சீருடையை மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் கபில்தேவ் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் கபில்தேவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, நிருபர் ஒருவர், உலக கோப்பை கபடி போட்டியில் பாகிஸ்தான் அணி ஏன் அழைக்கப்படவில்லை. பாகிஸ்தான் அணி பங்கேற்குமா என கேட்டார். அதற்கு, நீங்கள் இந்தியர் என்றால் இந்த கேள்வியை கேட்காதீர்கள் என கபில் பதில் அளித்தார். அப்போது அந்த நிருபர், தற்போது இந்த கேள்வி கேட்கப்பட வேண்டிய ஒன்று தான் என கூறினார்.

இதற்கு கபில்தேவ், காஷ்மீரின் உரி எல்லையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 18 பேரை இழந்துள்ளோம், என்றார்.  அந்த நாடு பங்கேற்பது போன்ற சில விஷயங்கள் குறித்து அரசு தான் முடிவு செய்யவேண்டும். வீரர்களாகிய நாங்கள் நாட்டிற்கு கடமை செய்ய வேண்டிய நிலையில், குளத்தில் குதிக்க வேண்டும் என்றால் உடனடியாக குதிக்க தயாராக இருக்க வேண்டும். 12 அணிகள் பங்கேற்கும் உலக கோப்பை கபடி போட்டியில் இந்தியாவும் ஒன்று. இதில் இந்தியா நன்கு விளையாடு என்றனர்.

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி