"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
20 செப்டம்பர் 2016

ராம்குமார் பிரேத பரிசோதனை செய்ய மீண்டும் உயர்நீதிமன்றம் தடை

0 comments

ராம்குமார் பிரேத பரிசோதனைக்கு உயர்நீதிமன்றம் தொடர்ந்து தடை விதித்துள்ளது. ராம்குமார் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் உடற்கூறுக்கு தடைவிதித்தனர். ஏற்கனவே 4 அரசு மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வுக்கு நியமிக்கப்பட்டிருந்தனர். ஆனால் 5-வதாக தனியார் மருத்துவர் ஒருவரை உடற்கூறு ஆய்வுக்கு நியமிக்க பரமசிவம் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

நீதிபதிகள் ரமேஷ், வைத்தியநாதன் அமர்வு வழக்கை விசாரித்தது. தனியார் மருத்துவர் நியமிக்கலாம் என்ற நீதிபதி ரமேஷ் கருத்தை மற்றொரு நீதிபதி ஏற்கவில்லை. இதனால் 3-வதாக ஒரு நீதிபதியை நியமித்து முடிவு செய்யலாம் என உயர்நீதிமன்ற அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. இறுதிமுடிவு வரும் வரை ராம்குமார் உடற்கூறு ஆய்வுக்கு நீதிபதிகள் தடை விதித்துள்ளனர். புழல் சிறையில் இறந்த ராம்குமாரின் உடல் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டது.

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி