
அதிமுக ஆட்சிக் காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திமுக அரசு தொடர்ந்த வழக்கு 15 வருடங்களாக நடைபெற்று வருகிறது.
இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள இவ்வழக்கில் இன்று 27 ம் தேதி நேரில் ஆஜராக தமிழக முதல்வர் ஜெயலலிதா, தோழி சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில் இன்று சசிககலாவும் அவரது உறவினர் இளவரசியும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று அமைச்சரவை கூட்டம் மற்றும் அலுவல் இருப்பதால் ஆஜராக வில்லை என்று தெரிகிறது.