அல்லாஹ்வின் திருப்பெயரால்..
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இந்த வருட புனித ரமழான் மாதம் இன்றுடனோ அல்லது நாளைய தினத்திலோ நிறைவை எட்டி பெருநாளை கொண்டாட ஆயத்தமாக உள்ளோம். இத்தருணத்தில் பெருநாளை எப்படி நாம் கொண்டாட வேண்டுமென்பது தொடர்பாக இலங்கை மவ்லவி நாசர் அவர்கள் நேற்றைய முன்தினம் (27-ஆகஸ்ட்-2011) துபாய் - தவ்ஹீத் இல்லத்தில் நிகழத்திய ரமழான் தொடர் சொற்பொழிவின் காணொளியினை உங்கள் பார்வைக்காக பதிகிறோம். இது ஒரு அவசியமான உரை என்பதால் சிறிது அவகாசம் எடுத்து பொருமையுடன் இந்த காணொளியை முழுமையாக கண்டு பயனடைய அன்புடன் வேண்டுகிறோம்.
இந்த காணொளி உரையின் சாரம் கேட்ட பின்னராவது நம்முடைய பெருநாள் கொண்டாட்டத்தை நபிவழியில் அமைத்து அனைவரோடும் அன்பையும்,சந்தோசத்தையும் ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்துகொண்டு சகோதரத்துவத்தை வலுப்படுத்த முயற்சிகளெடுப்போம், இன்ஷா அல்லாஹ் !.
- அதிரைநிருபர் குழு