"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
07 செப்டம்பர் 2011

i want kiss முத்தமிட...

0 comments
தோற்றுப் போகவே
உன்னோடுப்
போட்டியிடுகிறேன்!

மலர் கொண்ட உன்
விரல் பட்டதும்;
மணம் வீசும்;
இனித்தாலும் வலித்ததுப்
போலவே விசும்புவேன்!

நீ எட்டி உதைக்கவே
வம்புச் செய்வேன்;
உதைப்பட்டதும்;
உளறியப்படியே
உருண்டுவிழுவேன்;
உன் கன்னத்தின் குழிக் காண!

முத்தமிட நான்
எட்டும்போதெல்லாம்;
கொட்டுப்படும் என் தலை!

விழித் திறந்திருந்தாலும் அழகு;
இமை ஊமையாகி
உறங்கினாலும் அழகு!

கண்மூடும் நேரத்திலும்
காதோடு ஒலிக்கும்;
உன் முணகல் சத்தம்;
என் விடுமுறை முடிந்து
நாடு திரும்பியப் பிறகும்!

பொத்திப் பொத்திப்
பொக்கிஷமாய்;
பத்திரப்படுத்திப்
புகைப்படமாய் நீ!

ஏக்கத்தோடு கனவிலும்
கரம் நீட்டும் உனக்கு;
என் பதில்;
அடுத்த வருடம்தான்
என் விடுமுறை!

நன்றி : யாசர் அரஃபாத்
பதிப்பு : அதிரைFACT

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி