"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
29 அக்டோபர் 2011

+2 Exam Fees செலுத்த 31ம் தேதி கடைசி நாள் ..!

0 comments

தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் மாணவர்கள் பொதுத் தேர்வுக்கான கட்டணத்தை செலுத்த அக்டோபர் 31ம் தேதி கடைசி நாளாகும்.

இந்த கல்வியாண்டில் பள்ளிகளில் பிளஸ் 2 படித்து வரும் மாணவ, மாணவியருக்கு 2012ம் ஆண்டு மார்ச் மாதம் பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. www.kalvikalanjiam.com

விலக்கு அளிக்கப்பட்டவர்கள்!

இதில் தமிழகத்தில் உள்ள மெட்ரிக்குலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும்.

ஆனால், அரசு ஆதிதிராவிட நலப்பள்ளி, நிதி உதவி நகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவர்கள், சிறப்பு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளிகள், கண் பார்வையற்றோர் தமிழ் வழியில் படிப்பவர்கள் தேர்வு கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

மேலும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கும் குறைவாக உள்ள ஏழை மாணவர்களுக்கும் தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து தமிழக அரசு விலக்கு அளித்துள்ளது.

கட்டண விவரம்:

செய்முறை தேர்வு கொண்ட மாணவர்கள் தேர்வுக் கட்டணமாக ரூ.255ம்,

செய்முறை இல்லாத பாடங்கள் அடங்கிய பாடத்தொகுப்புக்கு ரூ.175ம் செலுத்த வேண்டும்.

தேர்வுக் கட்டணம் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பெண் பட்டியலுக்கான கட்டணம் சேர்த்து ஒரு மாணவர் ரூ.300ஐ செலுத்த வேண்டும்.

தேர்வு கட்டணம் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பெண் பட்டியலுக்கான கட்டணத்தை கருவூலத்தில் செலுத்த வேண்டிய கடைசி நாள் அக்டோபர் 31ம் தேதியாகும்.

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி