"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
15 அக்டோபர் 2011

அமீரக AAMF-ன் அன்பான வேண்டுகோள்...!

0 comments

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்


கண்ணியத்திற்குரிய அமீரகம் வாழ் அதிரை அனைத்து முஹல்லா சகோதரர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.

இம்மடல் உங்கள் அனைவரையும் பரிபூரண நலன்களுடன் சந்திக்க பிரார்த்திக்கிறோம். இன்ஷாஅல்லாஹ் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலில், நமதூரின் சில முஹல்லா சங்க நிர்வாகங்களுக்கு உட்பட்ட வார்டுகளுக்கு சங்க நிர்வாகம் சார்பாக நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களுக்கும், அப்படி உங்கள் பகுதி வார்டுகளுக்கு சங்க நிர்வாகம் சார்பாக எந்த வேட்பாளரும் நிறுத்தப்படாமல் இருந்தால், உங்கள் பகுதியில் போட்டியிடுகிற வேட்பாளர்களில் நல்லவர்களுக்கும் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் வாக்களிக்க வலியுருத்தி கேட்டுக் கொள்ள உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
என்றும் அன்புடன்,

நிர்வாகம்,
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு
அமீரகம்

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி