"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
27 அக்டோபர் 2011

நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் மண்ணறை வேதனை ..!

0 comments

அஸ்ஸலாமு அலைக்கும்,

கொழுத்தச்

செல்வத்தில் செழித்துக்

கொடுக்க மனமில்லையா;

வழங்கிய வாய்ப்பினை

கெடுத்து வணங்கவில்லையா;

இரக்கம் என்பதை

இதயத்தில் இருந்து

இறக்கிவைத்தவனா;

மது மாதுகளில் மூழ்கி

மதி இழந்தவனா!

இறுதி இடம் உனக்குண்டு;

தனிமைச் சிறை

தரையுண்டு;

அனைவரும் அழுது

அனாதையாய்

இருட்டறையில் நீ ..!

வினாவிற்கு

விடையில்லாமல்;

விழிகள் சொறுகி;

புடைத்த உன் எலும்புகள்

படைத்தவனால் நொறுக்கப்பட்டு;

படுகுழியில் பரிதாபமாய் ..!

முடிந்தப்பின்னே

முட்டிக்கொள்வதில்

பலனில்லை;

படைத்தவனைப் பயந்து

வாழ்ந்துக் கொண்டால்

பயமில்லை ..!


--யாசர் அரஃபாத்


Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி