"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
26 அக்டோபர் 2011

இந்தியச் சுதந்திரத்தில் நாங்கள் ..

0 comments

அஸ்ஸலாமு அலைக்கும்,

உதிரம் சூடேறி;

பற்றி எரியும் சரித்திரத்தின்

பக்கங்களுக்குச் சொந்தக்காரன்;

மேனியின் சதையை

விதையாக்கி;

அந்நியன் ஆடையை

அந்தோ! தீயிற்கு இரையாக்கி;

முத்தமிட்டு மரணத்தை

முண்டியடித்து;

மண்ணைக் காக்க;

சுதந்திரப் போரை

புனிதப் போராக்கி;

புரட்சி செய்து – ஆங்கிலேயனை

மிரட்டிவைத்த சமூகம்;

இன்று தேசத்துரோகிகளாக

சித்தரிக்கும் அவலம்!

நாடி வெடிக்க;

உதடுத் துடிக்க;

வரலாறு உரைக்கும்;

நாங்கள் துரோகிகள் அல்ல;

சரித்திரத்தை மாற்றிப் பேசும்

மாந்தரின் இதயத்தைக்

கிழிக்க வேண்டும்;

எங்காவது ஒர் மூலையில்

உண்மை ஒட்டியிருக்கா என்று!


ஆக்கம் - யாசர் அரஃபாத்



Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி