"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
08 நவம்பர் 2011

முஸ்லிம்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்க முடிவு. . .?

0 comments

இந்தியாவில் முஸ்லிம்கள் நிலைமை பற்றி ஆய்வு செய்வதற்காக சச்சார் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்தியா முழுவதும் ஆய்வுகளை மேற்கொண்ட சச்சார் தலைமையிலான குழு இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை மோசமாக உள்ளதாக தெரிவித்திருந்தது.
மேலும் முஸ்லிம்கள் ஏழ்மையான நிலையில் இருப்பதாகவும் சச்சார் கமிட்டி அறிக்கையில் கூறப்பட்டது.
இந்த அறிக்கை 2006-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. இதனை மேற்கோள் காட்டி பல முஸ்லிம் அமைப்புகள் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு வந்தனர். இதன் பிறகு முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதாக 2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது. த்ற்போது கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கிட வகையில் அரசியலமைப்பு சட்டத்தை திருத்தம் செய்ய மத்திய அரசு தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறு முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்பது சம்பந்தமாக ஆலோசனைகளை பிரதமர் அலுவலகத்துக்கு மத்திய சிறுபான்மை விவகாரதுறை அமைச்சகம் அனுப்பி உள்ளது.

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி