"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
02 நவம்பர் 2011

காய்கறி விலை திடீர் உயர்வு-ஏழை,நடுத்தர மக்கள் பாதிப்பு . .!!

0 comments

தொடர்மழை காரணமாக காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால, நெல்லையில் உள்ள நடுத்தர மற்றும் ஏழைமக்கள் பாதிக்கப் படுகின்றனர்.
கடந்த வாரம் சீரான விலையில் விற்ற காய்கறிகள் மூன்று நாட்களுக்கு முன் திடீரென உயர்ந்தது.கடந்த 31ம்தேதி ரூ.32-க்கு விற்ற ஒரு கிலோ தக்காளி நேற்று ரூ.40 ஆக விலை அதிகரித்துள்ளது. கத்தரி ரூ.20 லிருந்து ரூ.24, பீன்ஸ் & அவரை ரூ.30 லிருந்து ரூ.35 ஆகவும், புடலை & சீனி அவரை ரூ.10 லிருந்து ரூ.15, வெங்காயம் ரூ.30 லிருந்து ரூ.32, உள்ளூர் பல்லாரி ரூ.10 லிருந்து ரூ.15, மல்லி ரூ.25 லிருந்து ரூ.30 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன் ரூ.20 லிருந்து ரூ.13 ஆக குறைந்த ஒரு கிலோ மிளகாய் நேற்று திடீரென ரூ.30 ஆக விலை உயர்ந்துள்ளது. மாங்காய் ரூ.50, வெண்டை ரூ.20 என அதே விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து பெய்து வரும் மழையால் மகசூல் சேதமடைந்துள்ளது. இதனால் சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி