"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
19 டிசம்பர் 2011

எனது பாஷை ..! புரிய வில்லையே ஏன் ..!

0 comments
அஸ்ஸலாமு அலைக்கும்

தாய் மொழியில் இன்னும்
பரீட்சயம் இல்லா
மழலையாக;
பசி எனதுப் பாஷையாக;
அழுகை எனதுத் தேசமாக!

தாங்கிக்கொள்ளக்
கரமின்றி;
ஏங்கித்தவிக்கும்
விழிகளுடன்;
கண்டுக்கொள்பவர்
எவருமுண்டா என;
கொஞ்சம்
கல் நெஞ்சம்
கொண்டவர் கூட்டத்தோடு!

மிச்சமுள்ள எச்சிலைக்கு
எதிர்பார்த்து ஏக்கத்தோடு;
வீட்டில் வளர்க்கும்
நாய் பூனைக்கு
நாங்கள் மேலல்லவா!


Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி