"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
02 ஜனவரி 2012

காணவில்லை ! வெள்ளிக்கிழமையை !

0 comments

வியாழக்கிழமைக்குப் பிறகு வெள்ளிக்கிழமை தானே வரும், வரவேண்டும். ஆனால் இரண்டு பசிஃபிக் தீவு நாடுகளில் மட்டும் வியாழக்கிழமைக்குப் பின்னர் சனிக்கிழமை வந்திருக்கிறது. ஆச்சரியப்படாமல் தொடர்ந்து படியுங்கள்.

சமோவா, டொகிலாவ் ஆகிய இரண்டு பசிஃபிக் தீவு நாடுகளில் சுமார் 182,000 மக்கள் வசிக்கிறார்கள். இந்த இரு நாடுகளும் கடந்த வியாழக்கிழமையன்று தங்கள் கால மண்டலத்தை (Time Zone) மாற்றி அமைத்துக்கொண்டன. இதனால் ஏற்பட்ட பாரிய விளைவாக, வியாழன் முடிவடைந்த பின்னர் அவர்களுக்கு சனிக்கிழமை வந்துவிட்டது. இதன்மூலம் இத்தீவு வாசிகள் அருகிலுள்ள நியூசிலாந்து நாட்டின் நேரத்துடன் ஒத்துப்போவதுடன், ஒரே நேரத்தில் இத்தீவு வாசிகள் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னெடுக்க முடியுமாம். இத்தகவலை சமோவா பிரதமர் டுய்லாயிப்பா பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு நூறாண்டாக, இந்த இரு தீவுகளும், அருகிலிருக்கும் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகியவற்றுடன் ஒருநாள் பிந்தங்கியிருந்தன. இதற்குக்காரணம் 1892லிருந்து இருதீவுகளும் இதுவரை, அமெரிக்கத் தேதிக்கோட்டை பின்பற்றிவந்ததுதான். (தேதிக்கோடு பசிஃபிக் பெருங்கடலை இரண்டாகப் பிரிக்கிறது). அருகிலிருக்கும் வளர்ந்த நாடுகளான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகியவற்றுடனான வியாபாரத் தொடர்புகளுக்கு இந்த மாற்றம் பெரிதும் துணைபுரியும் என்று சொல்லப்படுகிறது. சமோவாவின் தலைநகரான ஏபியாவிலேயே தனது பிரதான அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளதால் டொகிலாவ் தீவும் சமோவாவைப் பின்பற்றி, கடந்த 'வெள்ளிக்கிழமையை' இழந்துள்ளது.


Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி