"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
23 ஜனவரி 2012

குழந்தைக்கு காய்ச்சல் அடிக்கிறது என்றால்,முத்தமிடுங்கள்!

0 comments

குழந்தை வளர்ப்பு என்பது தனிக்கலை. ஆனால் இன்று பரபரப்பாக ஓடிக்கொண் டிருக்கும் நவீன இளந்தாய்மார்கள் இந்த விஷயத்தில் தவித்துப் போகிறார்கள். குழந்தையின் செயல்பாடு புரியாமல் சில வேளைகளில் எரிச்சலும் அடைகிறார்கள்.
புரிந்து செய்தால் குழந்தை வளர்ப்பும் ஓர் இனிமையான விஷயமே. அதற்கான ஆலோசனைகள்:
அழுகை
பல்வேறு குழந்தை நல நிபுணர்கள், குழந்தைகளின் அழுகைகளை ஆராய்ச்சி செய்து, எப்போது, எதற்காக குழந்தை அழுகிறது என்பதைக் கண்டறிந்துள்ளனர். ஒரு குழந்தை அழும்போது அம்மா செல்லமாகக் கொஞ்சினால் குழந்தை தற்காலிகமாக உடனே அழுகையை நிறுத்திவிடுகிறதாம். அதற்குள் குழந்தைக்கு உணவூட்டவோ, தாலாட்டவோ, மசாஜ் செய்யவோ, குளிப்பாட்டவோ செய்யலாம்.
தூக்கம்
பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்குத் தூக்கத்தை வரவழைப்பதற்காக காரில் அல்லது ஏதாவது வாகனத்தில் எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் இது, பணத்தையும், நேரத்தையும் வீணடிக்கும் ஒரு பழக்கமாக மாறிவிடக்கூடும். மாறாகக் குழந்தையை அதன் சக்கர நாற்காலியில் வைத்து மெதுவாக உருட்டலாம். அப்போது ஏற்படும் மெல்லிய அதிர்வு, நகர்வுக்குக் குழந்தை பழகி தூங்கத் தொடங்கி விடும்.
பாலூட்டுதல்
குழந்தைக்குப் பாலூட்டும்போது அதை மார்பகத்தை நோக்கி அழுத்த வேண்டாம். அப்போது குழந்தை அதன் இயல்பின்படி தனது தலையைப் பின்னோக்கித் தள்ளும்.
குழந்தையைத் தூக்குதல்
குழந்தையைத் தூக்கும்போது அதன் முதுகுப் புறமாக அதிகமாகப் பிடித்துத் தூக்கக்கூடாது, அது குழந்தையின் தண்டுவடத்தைப் பாதிக்கும் என்று சிலர் `அறிவுரை’ சொல்வார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், பின்னால் பிடித்துத் தூக்குவது குழந்தையின் `ரிப்ளெக்ஸ்’ திறனை மேம்படுத்துகிறது. பின்புற மற்றும் கழுத்துத் தசைகளையும், தண்டுவடத்துக்குத் துணையாக உள்ள தசைகளையும் வலுப்படுத்துகிறது.
ஆடை அணிவித்தல்
தங்கள் குழந்தையைக் கதகதப்பாக வைத்திருப்பதற்காக அம்மாக்கள் அவற்றுக்கு கை, கால் தெரியாமல் ஆடைகளை மாட்டிவிடுகிறார்கள். அதற்குப் பதிலாக காற்றோட்டமான, மெல்லிய துணி ஆடைகளை அணிவிக்கலாம். அது குழந்தை யின் இயல்பான உடல் வெப்பநிலையைப் பரா மரிக்க உதவுவதுடன், புற வெப்பநிலையிலிருந்தும் பாதுகாக்கும்.
மெதுவாகத் தட்டுதல்
குழந்தையின் நெற்றி, நெஞ்சு அல்லது பின்புறத்தில் மெதுவாகத் தட்டுவது ஒரு தூண்டலாகச் செயல்பட்டு குழந்தையைத் தூக்கத்தில் ஆழ்த்துகிறது. அப்போது எழும் ஓசையும் `பாசிட்டிவ்’வான பலனைத் தருகிறதாம்.
மஞ்சள் காமாலை
குழந்தை பிறந்த முதல் வாரத்திலேயே மஞ்சள் காமாலை பாதிப்பு அபாயம் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிப்பார்கள். அப்போது குழந்தையின் சருமம் வெளிர் மஞ்சளாகலாம். ரத்தத்தில் சேரும் `பிலிரூபினால்’ தேகம் இப்படி மஞ்சளாக மாறுகிறது. குழந்தையின் மலம் பச்சை நிறத்திலிருந்து மஞ்சள் நிறமாக மாறுகிறது என்றால், ரத்தத்தில் உள்ள `பிலிரூபினை’ உங்கள் குடல் வெளியேற்ற முயல்கிறது என்று அர்த்தம்.
வெப்பநிலையைச் சோதித்தல்
குழந்தைக்கு காய்ச்சல் அடிக்கிறது என்றால், பெரியவர்களைப் போல நெற்றியைத் தொட்டுப் பார்க்காமல், குழந்தையின் கழுத்தின் பின்புறம் முத்தமிடுவதன்மூலம் அதன் உடல் வெப்பநிலையைத் துல்லியமாக அறியலாம். நனைத்துப் பிழிநëத துணியை குழந்தையின் தலையில் போடுவதன் மூலம், மருத்துவச் சிகிச்சை அளிக்கும்வரை அதன் உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தலாம்.
குளியல்
இளந்தாய்மார்கள் பலர் குழந்தையை எப்படி குளிப்பாட்டுவது என்று தெரியாமல் திகைத்துப் போகிறார்கள். அந்நேரத்தில் குழந்தை அழுதால் என்ன செய்வது என்று புரியாமல் தடுமாறிப் போகிறார்கள். அப்போது, பெரியவர்கள் அல்லது கணவரின் உதவியை நாடலாம்.
இடுப்பு ஆடை
குழந்தையின் இடுப்பு ஆடையை உடனுக்குடன் மாற்றத் தவறுவதால் நோய்த் தொற்று ஏற்படலாம். இன்று நவீன `டயாப்பர்கள்’ வந்துவிட்டன. குழந்தையின் சருமத்தைச் சுத்தமாகவும், உலர்வாகவும், வாசனையற்றும் வைத்துக்கொள்வது முக்கியம்.

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி