"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
23 ஜனவரி 2012

வெள்ளைக் கைலி (வேட்டி)

0 comments
அணைக்கும் உறவுகள்
அனலாய் விழிகளில்;

கைரேகைகளும்சிலிர்த்து நிற்கும்

நனைந்துப்போய்;
நிழற்படங்கள் நமுத்துப்போய்!

குழந்தையின்
எச்சில் சொட்டும் உதடும்;
விரல் தொடும் அழகும்;
கொடுத்த வைத்தக் கைப்பேசியைக்

கண்டு உறுமி நிற்கும் மனம்!
மாறி மாறி
ஆறுதல் சொல்லி;
மாதங்கள் ஓடி;
ஓய்ந்துப்போய் ஓரமாய்;
என்னையும்
உன்னையும் போல்!

படித்தக் கடிதங்களுக்கு
மீண்டும் விழி திரும்பும்;
வெடித்து நிற்கும்
இதயத்திற்கு மருந்தாய்;
கண்ணீர்துளிகள் அதன்
விருந்தாய்!

பிரிந்து வாடும் எனக்கு;
வரிந்துக் கட்டும்
வெள்ளிக்கிழமையில்
வெள்ளைக் கைலி மட்டும்
ஆறுதலாய்;
ஊர் வாசத்துடன்!

ஆக்கம் :- யாசர் அரபாத்

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி