"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
27 பிப்ரவரி 2012

ஊனமான உணர்வுகள்

0 comments

உணர்வுகள் வெறிப்பிடித்து;
உயிர்களைத் தினம் குடித்து;
கர்பிணியின் கருவறுத்து;
ஊடகங்கள் வாயடைத்து;
எரித்து அழித்துக் கொன்ற
இனம் மண்ணுக்குள் மக்கி!

குரோதத்திற்கு வழிக்கொடுத்து;
கலவரத்திற்கு இடம் கொடுத்து;
ஆட்சிக்குள் ஒளிந்து;
இரத்த வேட்கைக் கொண்டு
நரபலிகேட்கும் மோடி;
தலையெடுக்கத் தலையசைத்த
தலைமையில் உள்ள பேடி!

இனம் காக்க;
குருதிக் கொதிக்க;
குரல் கொடுக்க;
தேசம் தாண்டிப்
பாசம் காட்டும்
என் சமுதாயமே;
ஒரு தேசத்தில் இருந்து;
தட்டிக்கேட்கத் துணிவில்லாமல்
தலைக்குனிந்து நீ ஊமையாகி;
மனம் ஊனமானதேனோ!

ஆக்கம் :- யாசர் அரஃபாத்

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி