
நிகழ்ச்சிக்கு சகோதரர் (கசும்சப்பா) பஷீர் முன்னிலை வகிக்க, சகோதரர் ஜஃபருல்லாஹ் (ஆஸ்பத்திரிதெரு) தலைமை ஏற்று தொகுத்து வழங்கினார். சிறுமி நூருல் சபீலா கராஅத் ஓத, சகோதரர் இப்ராஹீம் வரவேற்புரை வழங்கினார்.
அய்டாவின் தலைவர் ஷம்சுத்தீன் அய்டாவின் துவக்கம் மற்றும் முன்னேற்றத்திற்க்காக உழைத்தவர்கள் பற்றி நினைவு கூறி, விளக்கமளித்தார். இறுதியில் அய்டாவின் செயலாளர் அப்துல்காதர் (ஜெய்லானி) நன்றி நவில இரவு உணவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது.
ஊரில் இருந்து புனித உம்ரா பயணம் வந்தவர்களும் கலந்துகொண்டனர்.
நமதூர் சகோதரர்கள் சுமார் 146 பேர் குடும்பத்துடன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
பதிப்பு : அதிரை எக்ஸ்பிரஸ்