"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
25 ஆகஸ்ட் 2011

பிரசவ வலி ...

0 comments
என் வயிற்றில்
ஒளிந்துக்கொண்ட
உன்னால்
பசி மறந்தேன்;

பரிகாசங்களுக்கு
நடுவேத் திணறி;
புன்னகையில்
பூரித்தப்போதும்;

சிலிர்த்து நின்ற என்
மயிற்கால்களால்;
நிற்கத் துணிவிழந்த
என் பாதங்கள்
பிரசவத்தை எண்ணி!

வலியெடுத்த என் இடுப்பினால்
விழிப்பிதிங்கி நான் சரிய;
உறவுகள் மருத்துவமனையில்
காவல்காரர்களாய்!

முள் குத்தினாலும்
திட்டித் தீர்க்கும் என் வாய்;
துடித்த வலியால்
கதறினாலும்;
மனம் வரவில்லை;
கருவில் ஒளிந்திருக்கும்
உன்னைக் கரித்துக்கொட்ட!

விழிகள் இருண்டு;
உதடுகள் வறண்டு;
உள்ளம் மிரண்டு;
குரலுக்குள் மிச்சம் வைத்த
ஒசையையும் கொட்டித்தீர்த்து;
விரல்கள் வியர்வையில் நனைய
வழிந்தோடும் கண்ணீர்கள்
காதோடு ஏதோ இரகசியம் பேசக்;
கட்டுப்பட்ட என் கரங்கள்
மருத்துவச்சியின் பலத்திற்கு முன்!

என் வலிகள்
உன் அழுகைக்கு முன்
பலியாக;
அழுத என் விழியும்
அசதியில் அயர்ந்துவிட;
விழித்துப் பார்க்கையில்
மலர்ந்த என் முகம்;
உன் முகம் கண்டு...

ஆக்கம் : யாசர் அரஃபாத்
பதிப்பு :அதிரை fact

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி