"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
04 அக்டோபர் 2011

குழந்தைகளின் எதிர்காலம் - ? உங்கள் கையில்

0 comments


குழந்தைகள் ஒவ்வொருவருமே ஒவ்வொரு விதத்தில் கற்கிறார்கள். உதாரணமாக, சிலர் புத்தகத்திலிருக்கும் விஷயங்களை வரிசையாக... பக்கம் பக்கமாகப் படித்தே கற்றுக் கொள்வார்கள். வேறு சிலரோ புத்தகத்திலிருக்கும் படங்கள், அட்டவணைகள், க்ராஃப் போன்றவற்றிலிருந்து விஷயங்களை கிரகித்துக் கற்றுக் கொள்வார்கள். இவர்களைக் கூட இரண்டு வகையாகப் பிரிக்கலாம். உதாரணமாக முதல் வகையினர் முன் அட்டையிலிருந்து பின் அட்டை வரை வார்த்தைக்கு வார்த்தை படித்து, நடுநடுவே நிறுத்தி, படித்ததை அசை போட்டு, பின் கிரகித்துக் கொள்ளும் ரகம். இரண்டாவது வகையினரோ புத்தகத்திலிருக்கும் சப்டைட்டில்கள், முக்கியமான பாயிண்ட்ஸ் என்று படித்து கிரகித்துக் கொள்ளும் ரகம். இதில் இதுதான் சரி.. அல்லது இது தவறு என்று எதையுமே சொல்ல முடியாது.

அதேபோல் வகுப்பில் ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்கும் முறையிலும் வித்தியாசங்கள் இருக்கும். ஆக ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்கும் பாணியும், நம் குழந்தைகள் கற்றுக் கொள்ளும் பாணியும் ஒத்துப் போகாத குழந்தைகள் பாடத்தில் சுவாரஸ்யம் இழக்கிறார்கள். இதனால் வகுப்பில் கவனம் போகிறது. விளைவு படிப்பதென்றாலே அவர்கள் உற்சாகம் இழந்து விடுகிறார்கள். மார்க்கும் அடிபடுகிறது.

குழந்தை அதிக மார்க்குகள் பெற முடியாத போது, "ஹும்! நீ இன்னும் நல்லா படிச்சிருக்கணும்... என்பது போல் காரணங்கள் சொல்வோம். ஆனால், உண்மையான காரணங்கள் என்னவென்றால் ஒவ்வொரு குழந்தை கற்றுக் கொள்ளும் பாணியிலும் பலங்களும் உள்ளன! பலவீனங்களும் உள்ளன! இது தெரிந்தால் தான் நம்மால் நம் குழந்தைகள் பெற முடியாத மதிப்பெண்களுக்குக் காரணம் சொல்ல முடியும்.

இன்றைய கல்வி சூழ்நிலையில் மதிப்பெண்கள் பெறுவதே குறிக்கோளாகி விடுவதால், குழந்தைகள் பாடங்களை எப்படியாவது மனப்பாடம் செய்வது என்றாகி விடுகிறது. இப்படி படித்து அவர்கள் தேறினாலும் பாடத்திலிருக்கும் அடிப்படைகளை அவர்கள் கற்கத் தவறிவிடுகிறார்கள்.

இதனால் சில குழந்தைகள் பிற்காலத்தில் என்ஜினீயர்களாகவோ, மருத்துவர்களாகவோ ஆனாலும் கூட, ஒரு வெற்றிகரமான என்ஜினீயர்களாகவோ, மருத்துவர்களாகவோ ஆக முடிவதில்லை!

குழந்தைகளின் கற்கும் முறையில் இருக்கும் நிறைகுறைகளை முன்கூட்டியே தெரிந்து கொண்டு, அவர்களின் எதிர்காலத்தை சிறப்பானதாக அமைத்து தருவது பெற்றோர்களின் கடமையாகும்.

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி