"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
24 அக்டோபர் 2011

பொறுப்பு ஏற்பு அழைப்பிதழ்...!

0 comments

நடந்து முடிந்த உள்ளாட்சி மன்றதேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சகோதரர் அஸ்லம் அவர்கள் மற்றும் 21 வார்டு உறுப்பினர்களும்நாளை காலை பதவிப் பிரமாணம் ஏற்க உள்ளனர் .

நமதூர் சகோதரர்கள் அனைவரும் பணிநிமித்தமாக வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் உள்ளனர். இன்னும் தேர்தல் நேரத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய சகோதர்கள் எனக்காக துஆ செய்த நல் உள்ளங்கள் என எனது வெற்றிக்காக அல்லும் பகலும் அயாரது உழைத்த அன்பர்கள் அனைவரையும் நேரில் அழைப்பு கொடுக்க எண்ணினாலும் போதிய கால அவகாசம் இல்லாத காரணத்தினால் நமதூர் இணையதளங்களில் வாயிலாக அழைப்பு கொடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப் பட்டுள்ளேன்.

எனவே அன்புள்ளம் கொண்ட அதிரை நகர பொதுமக்கள், வாக்காளர்கள், கழகத் தோழர்கள், நண்பர்கள் அனைவரும் இதனையே எனது நேரடி அழைப்பாக ஏற்று நாளை காலை நடைபெற இருக்கும் பொறுப்பு ஏற்கும் நிகழ்ச்சிக்கு தவறாது கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன் . வஸ்ஸலாம்.

என்றும் மக்கள் நலப்பணியில் . SH.அஸ்லம்

THANKS :ADIRAIXPIRESS

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி