"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
15 நவம்பர் 2011

குழந்தைகள் பொறுப்பானவர்களாக வளர....

0 comments

பத்து வயது சுவேதா பள்ளிக்குக் கிளம்ப இன்னும் ஒரு மணி நேரம்தான் இருக்கிறது. அந்த நேரத்தில் இந்த ஹோம்&வொர்க் பிரச்னையைக் கிளப்பி சுவேதா அழுவது விமலாவுக்கு எரிச்சலைக் கிளப்பியது.

நேத்தே கேட்டேன். அப்போ உன் அத்தை பசங்களோட ஆட்டம் போட்டுக்கிட்டு ஒண்ணுமே ஹோம்வொர்க் இல்லைன்னு குஷியா தலையை ஆட்டிட்டு, இப்போ இவ்வளவு பாடம் சொன்னா என்ன செய்யறது? பக்கத்து வீட்டு சுரேஷ் மாதிரி நீயாகவே கடகடன்னு செய்து முடிச்சா, நான் ஏன் கோபப்படப் போறேன்! உனக்குப் பக்கத்திலே யாராவது உட்கார்ந்து முடுக்கி விட்டுக்கிட்டே இருக்கணுமே! ஏன்தான் இப்படி பொறுப்பில்லாமல் இருக்கியோ...? என்று நீளமாக விமலா சுவேதாவைக் கோபித்தாலும், பக்கத்தில் உட்கார்ந்து அவனை ஹோம்வொர்க் செய்ய வைத்துக் கிளப்பியதுதான் நடந்தது! இல்லையென்றால் சுவேதா தண்டனைக்குப் பயந்து பள்ளிக்குச் செல்லமாட்டேன் என்று அடம்பிடிக்கிறாளே!

சின்ன (பெரிய) குழந்தைகள் இருக்கும் எல்லா வீடுகளிலும் நடக்கும் ஒரு காட்சிதான் இது! திட்டுவோம்; அடிப்போம்; மட்டந்தட்டிப் பேசுவோம். ஆனால் கடைசியில் உதவி செய்து விடுவோம்! இல்லாவிட்டால் பள்ளியிலிருந்து பெற்றோருக்குச் சிட்டு வருமே! டீச்சரைச் சந்திப்பது ஒன்றும் ருசியான அனுபவமில்லையே!

ஹோம்வொர்க் செய்வது சுவேதாவின் பொறுப்பா? விமலாவின் பொறுப்பா? பத்து வயது சுவேதாவுக்குத் தானாகச் செய்யத் தெரியாதா என்ன? ஏன் இந்த நெருக்கடி? பெற்றோர் பலரும் ஆரம்பத்திலிருந்தே குழந்தைகளுக்கு அவர்கள் பொறுப்புகளைச் சொல்லிக் கொடுத்து வளர்ப்பதில்லை. ஆரம்பத்திலிருந்தே என்றால்? இரண்டரை, ஐந்து வயது முதல்...! விளையாட வாரி இறைக்கும் பொருட்களை மறுபடி எடுத்து வைப்பது தன் பொறுப்புதான் என்பதை எத்தனை பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்கிறோம்? விளையாடிய களைப்பில் குழந்தை தூங்கிப்போய்விடும்; நாம் அத்தனையையும் புகார் சொல்லாமல் எடுத்து வைத்துவிடுவோம். ஆக, வாரி இறைப்பதுதான் என் வேலை; எடுத்து வைப்பது என் வேலையில்லை என்றுதான் குழந்தை புரிந்து கொள்ளும்! ஐந்தில் வளையாதது ஐம்பதில் (அம்மம்மா, ஐம்பது என்பது தொலை தூரம்... பத்தில் என்றே கொள்ளலாம்) வளையுமா? சின்னச் சின்ன வேலைகள் & வெளியிலிருந்து வீடு திரும்பியதும் ஷூவை அதற்குரிய இடத்தில் வைப்பது, பால் குடித்த தம்ளரை சமையலறை முற்றத்தில் போடுவது, பிரித்த பிஸ்கெட் பாக்கெட்டின் உறையைக் குப்பைக் கூடையில் போடுவது போன்ற செயல்களெல்லாம் ஐன்று வயதுக் குழந்தையால் செய்ய முடியாதா என்ன? பெற்றோருக்கு ஓர் எண்ணம் & என் குழந்தையை நான்தானே பார்த்துக் கொள்ள வேண்டும்; சரியாகப் பார்த்துக் கொள்ளாவிட்டால் நான் என்ன நல்ல அம்மாவா? அப்பாவா? இதுதான் தடையாயிருக்கிறது.

சிறு வயது முதலே சுவேதாவுக்கு என்னென்ன பொறுப்புகள் உண்டு என்பதைப் பெற்றோர் கற்றுக் கொடுக்காததால்தான் இந்தச் சிக்கல். இப்போதாவது விமலா சரிசெய்யாவிட்டால், நாளை சுவேதா பெரிய வகுப்புகளுக்குப் போகும் போது, அவளைக் குற்றம் சொன்னால் கோபம் வரும். எதிர்த்துப் பேச ஆரம்பிப்பாள். விமலாவுக்கு இன்னும் கோபம் வரும். சுவேதா ஒத்துழையாமையைக் கடைப்பிடிப்பாள்.

இதையெல்லாம் தவிர்க்க ஒரே வழி தன் செயல்களின் பின்விளைவுகளை சுவேதாவைச் சந்திக்க விடுவதுதான். அத்தையும் குழந்தைகளும் முதல் நாள் இரவு வருவது முன்கூட்டியே தெரிந்திருக்கும். அவர்கள் வருமுன் விமலா சுவேதாவைத் தயார் செய்திருக்க வேண்டும்.

அத்தை குழந்தைகளோட நீ ஜாலியா விளையாடணும்னுதான் நான் ஆசைப்படறேன்; ஆனா ஹோம்வொர்க்கையெல்லாம் அவங்க வரதுக்குள்ளே முடிச்சுட்டா கவலைப்படாம விளையாடலாம். இன்னைக்கு ஒரு நாள் நீ டீ.வி. பாக்கறதை விட்டுட்டு அந்த நேரம் ஹோம்வொர்க்கை முடிச்சுடுறியா? அப்புறம் இன்னொரு விஷயம். சுவேதா! இன்னைக்கே முடிக்காம, நாளை காலை அவசரத்திலே செய்ய ஆரம்பிச்சா, என்னாலே முடிக்க முடியாது. அப்புறம் அழுது பயந்து பிரயோசனம் இல்லை. ஹோம்வொர்க் செய்யாம போனா ஸ்கூலிலே என்ன நடக்கும்னு நான் உனக்குச் சொல்லத் தேவையில்லே. யோசனை பண்ணிக்கோ! என்று முதல் நாளே அவள் பொறுப்பை உணர்த்தி அதைச் செய்யாமல் இருந்தால் சந்திக்க வேண்டிய பின்விளைவுகளால் விளக்கி எச்சரிக்க வேண்டியது மட்டும் தான் பொற்றோர் பொறுப்பு.

ஒருமுறை பள்ளியில் தண்டனை வாங்கினால், மறுமுறை கவனமாக இருப்பாள். விமால நினைவில் கொள்ள வேண்டியவை ஐந்து: ஒன்று இப்படிப் பேசும் போது, குரலை உயர்த்திப் பேசாம இருப்பதும், ஒரேயடியாகக் கெஞ்சிப் பேசாமலிருப்பதும் நல்லது அக்கறை நிறைந்த குரலில் அழுத்தமாகப் பேச வேண்டும். இரண்டு முதல் நாள் சொன்ன பின்விளைவுகளை மறுநாள் மாற்றிக் கொள்ளக்கூடாது. உதவ மாட்டேன் என்று முதல் நாள் பேசிவிட்டு மறுநாள் அழும் குழந்தையைப் பார்க்க முடியாமல் உதவி செய்துவிட்டால் உங்கள் முயற்சிகள் வீண்!

காய்ச்சல் வந்தால், கசப்பு மருந்தானாலும், கொடுக்கத்தானே செய்வோம்? மனதைக் கல்லாக்கிக் கொண்டு, குழந்தைக்கு எது நல்லதோ அதைச் செய்வது தான் சிறந்தது. ஐந்தாவதாக, ஒரு முக்கியமான தகவல். குழந்தையின் பொறுப்புகள் என்னென்ன என்று தெளிவாக விளக்கி (அவர்களால் அதைச் செய்ய முடியுமா? அல்லது விருப்பமா? என்று தெரிந்த கொண்டபின்) செய்யாவிட்டால் இன்னின்ன பின்விளைவுகளை எதிர்நோக்க வேண்டிவரும் என்பதையும் அப்போதே பயமுறுத்தாமல் அக்கறையாகச் சொல்லி விடுவது குழந்தையைப் பொறுப்பாக நடக்க வைக்கும்.

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி