"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
15 டிசம்பர் 2011

பேரூராட்சி மேற்கொள்ள வேண்டிய பணிகள் என்ன ?

0 comments


பேரூராட்சிகளின் செயல்பாடுகள் !
தமிழகத்தில் உள்ள பேரூராட்சிகள் நான்கு நிலைகளாக ( நிலை-2, நிலை-1 , தேர்வு நிலை, சிறப்பு நிலை ) பிரிக்கப்பட்டு அதில் அதிராம்பட்டினம் தேர்வு நிலை பேருராட்சியாக உள்ளது.


பேரூராட்சி மேற்கொள்ள வேண்டிய பணிகள் என்ன ?


1. பொது சுகாதாரம் – துப்புரவு, கழிவு நீர் அகற்றுதல், கழிப்பறை வசதி, திடக்கழிவு மேலாண்மை.
2. மக்கள் உடல் நலம் மற்றும் நோய் தடுப்பு ( மருத்துவ வசதி உட்பட )
3. குடி நீர் வழங்கல்
4. விளக்கு வசதி
5. சாலை வசதி
6. தெருக்கள் அமைத்தல், பராமரித்தல்
7. பொதுசொத்துக்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு
8. கட்டிடங்கள் கட்டுவதை ஒழுங்கு செய்தல்,
9. தொழிற்ச்சாலைகள் மற்றும் தொழில்கள் ஏற்படுவதை உரிமம் வழங்கி முறைபடுத்துதல்
10. பிறப்பு, இறப்பு பதிவு
11. மையானங்கள் ( கஃப்ர்ஸ்தான் ) ஏற்படுத்தி பராமரிப்பு

பொது சுகாதாரம் பராமரிப்பு :-
1. குப்பைகள் உருவாகும் இடத்திலேயே பிரிப்பது, அவற்றை குப்பைகிடங்குகளுக்கு கொண்டுசெல்வது, பிறகு பாதுகாப்பான முறையில் குப்பைகளை அழிப்பது மற்றும் குப்பைகளிலிருந்து திரும்ப பயன்படுத்தக்கூடிய பொருள்களை தயாரிக்ககூடிய பொருள்களை தனியாக பிரிப்பது ( Waste Recycling ) போன்ற அம்சங்கள் உண்டு.
2. வீடுகளிலேயே திடக்கழிவுகளைப் பிரித்து சேகரம் செய்யப்படுகின்றன.
3. குப்பை அகற்றுதல் பற்றியும், சுற்றுப்புற சுகாதாரம் குறித்தும் தெருக்களில் அசுத்தம் செய்வதை தடுக்கவும், பயன்படுத்திய பிளாஸ்டிக் கழிவுப் பொருள்களை தெருக்களில் வீசி எறிவதை தடுக்கவும் மக்களிடயே விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளாட்சி அமைப்புகள் பயன்தரதக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4. அனுமதித்த அளவை வீட குறைவான துப்புரவு பணியாளர்கள் இருக்கும் பட்சத்தில், மிகை செலவீனம் ஏற்படாத வகையில் சுய உதவிக் குழுவினரை பயன் படுத்திக் கொள்ளலாம்.
5. கழிவு நீர் தேங்காமல் கண்காணித்தல் வேண்டும்.
6. கொசுத்தொல்லையை ஒழித்திட, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் / மாவட்ட மலேரியா ஒழிப்பு அலுவலர்களுடன் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
7. மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனரால் அரசு மூலம் வழங்கும் லார்விசைடு ( Larvicide ) வாங்கி பயன்படுத்த வேண்டும்.
8. பொதுக்கழிப்பிடங்கள் சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
9. பிளிச்சிங் பவுடர், பினாயில் ஆகியவை அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில்தான் வாங்கப்படவேண்டும்.
10. மக்கள் நல்ல உடல் நலத்துடன் வாழ கழிவு மேலாண்மைப் பணிகள் அவசியம். அதிலும் நன்கு திட்டமிட்டு மேலாண்மை செய்தல் மிகவும் அவசியம்.
11. திடக்கழிவுகளை அவை உற்பத்தியாகும் இடங்களிலேயே மக்கும் கழிவு, மக்காத தன்மையுள்ள கழிவு என தரம்பிரித்து, தனித்தனியாக சேகரம் செய்யப்படவேண்டும்.
12. தரம்பிரித்து கழிவுகளைக் கையாளலாம் மற்றும் சேகரம் செய்யும் முறைக் குறித்து பொதுமக்கள் நன்கு அறிந்து விரைந்து செயல்பட விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
13. பொதுஇடங்களில் ஏற்படும் கலவை குப்பைகளை குறிப்பிட்ட இடைவெளிகளில் அகற்றுதல் வேண்டும்.
14. மக்கும் தன்மையுள்ள குப்பைகளை உரமாக்குதல் மற்றும் மக்காத தன்மையுள்ள குப்பைகளை மறுசுழற்சி செய்தல் வேண்டும்.
15. ஒவ்வொரு வீட்டிலிருந்தும் தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை நேரடியாக பெறத்தக்க ஏற்பாடுகள் செய்தல் வேண்டும்.
16. கழிவு மேலாண்மைப் பணிகளில் சுய உதவிக் குழுக்கள், தொண்டுநிறுவனங்கள் ஆகியவற்றின் சேவைகளைப் பெறுதல் வேண்டும்.
17. தள்ளு வண்டி / மிதி வண்டி மூலம் ஒவ்வொரு வீட்டிலும் பெறப்படும் தரம் பிரித்த குப்பைகளை, லாரி / டிராக்டர் மூலம் பெற்று செல்ல இரண்டாம் சேகரிப்பு மையங்கள் ( Secondary Collection Point ) ஏற்படுத்தி தள்ளு வண்டி / மிதி வண்டிகள் மற்றும் அவற்றின் பராமரிப்பாளர், நீண்ட தூரம் தேவையின்றி பயணிப்பதை தவிர்த்தல் வேண்டும்.
18. கழிவுகளை தரம் பிரிக்கும் கூடம், உரத்தயாரிப்பு கூடம், மக்காத் கழிவுகளை தரம்பிரித்து மறு சுழற்சிக்கு அனுப்ப வேண்டிய ஏற்பாடுகளை மேற்கொள்ளும் கூடம், இருப்பு வைப்பு கூடம் ஆகிய வசதிகளுடன் உரத்தயாரிப்பு கூடம் அமைத்தல் மற்றும் தர வளாகத்தை அழகுற பராமரித்தல் வேண்டும்.
19. உரிய வழிமுறைகளை கையாண்டு தரமான உரம் தயாரித்தல் வேண்டும்.
20. மண் புழு உரம் தயாரித்தல் வேண்டும்.
21. கழிவு நீர்க் கால்வாய்களை குறிப்பிட்ட இடைவெளியில் சுத்தம் செய்தல் மற்றும் கிருமி நாசினி தெளித்தல் வேண்டும்.
22. அபாயகரமான கழிவுகளை அவற்றிக்குரிய நடைமுறைகளை பின்பற்றி கவனமாக கையாளுதல் மற்றும் அழித்தல் வேண்டும்.
23. மருத்துவக்கழிவுகளை அந்தந்த மூவு செய்து கொள்தல், கண்காணித்தல் மற்றும் தவறு செய்யும் மருத்துவமனைகள் மற்றும் தனி நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
24. திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு பயன்படுத்தும் வாகனங்களுக்கு உரிய பணி அட்டவணை தயாரித்தல் மற்றும் அதனை பின்பற்றுதல்- வாகனங்களுக்கு எண்கள் இட்டு பராமரித்தல் வேண்டும்.

இறைவன் நாடினால் ! தொடரும்......

Source : Website of the Tamil Nadu Government

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி