"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
31 ஜனவரி 2012

மாணவர்களிடம் நேர்மையை வளர்க்க பள்ளிகளில் ஊழலுக்கு எதிரான பாடத் திட்டம்: மத்திய கண்காணிப்பு குழு முயற்சி

0 comments

ஊழல் ஒழிப்பை மாணவர்களிடம் இருந்து துவங்கும் வகையில் பள்ளிகளில் ஊழலுக்கு எதிரான பாடத்திட்டம் கொண்டு வரப்படுகிறது. நாட்டில் இன்று ஊழல், புரையோடிப்போன நோயாக உள்ளது. எந்த துறையை எடுத்துக்கொண்டாலும் அங்கு லஞ்சம், ஊழல் தலை விரித்தாடுகிறது. ஊழல் மக்களை நேரடியாக பாதிப்பதுடன், பொருளாதாரத்திலும் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது.

ஊழலை தடுக்க மத்திய கண்காணிப்பு ஆணையம் உள்ளிட்ட சில அமைப்புகள் இருந்தும், கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே, ஊழல் குறித்து இளம் வயதினரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினால், எதிர்கால ஊழல் நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று மத்திய கண்காணிப்பு ஆணையம் நம்பியுள்ளது. எனவே, பள்ளிகளில், ஊழலுக்கு எதிரான பாடத்திட்டம் ஒன்றை சேர்க்க மத்திய கண்காணிப்பு ஆணையம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம், மாணவர்கள் மத்தியில் தார்மீகம், ஒருமைப்பாடு மற்றும் நேர்மையை வளர்க்க முடியும்.

ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த இயலும் என்று இது நம்புகிறது. இதுபற்றி, மத்திய கண்காணிப்பு ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பள்ளிகளில் ஊழல் எதிர்ப்பு பாடத்தை நீதி போதனை வகுப்புகளில் சொல்லிக் கொடுக்கும் வகையில் ஒரு பாடத்திட்டமாக வைக்க ஆணையம் விரும்புகிறது. இதன் மூலம், ஊழலால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பாதகமான விளைவுகள் பற்றி மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லப்படும். இது போன்ற பாடத்திட்டம், வளர்ந்து வரும் பல நாடுகளின் பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ளது. அதை பின்பற்றியே இங்கும் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

எதிரான நிலை இதன் மூலம், சமூகத்தில் நல்ல கோட்பாடுகளையும், ஊழலை சகித்துக் கொள்ள முடியாது என்ற மனநிலையை மக்கள் மனதிலும் உருவாக்க முடியும். இந்த விஷயம் பற்றி மனித வள மேம்பாட்டு துறை அமைச்சக அதிகாரிகளுடன் மத்திய கண்காணிப்பு ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி, கொள்கை அளவில் ஒப்பந்தமும் செய்யப்பட்டுவிட்டது.

அடுத்த கட்டமாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் இதுபற்றி கடிதம் எழுத திட்டம் உள்ளது. ஊழலுக்கு எதிரான பாடத்திட்டம், சி.பி.எஸ்.சி. பள்ளிகளில் விரைவில் படிப்படியாக அமல்படுத்தப்படும். பின்னர், மற்ற பள்ளிகளுக்கும் விரிவு படுத்தப்படும். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.



ஆக்கம் : ABDULHAMEED BIN SULTHAN IBRAHIM DUBAI
+971 55 46 23 13 4

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி