"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
09 பிப்ரவரி 2012

பாங்காக்கில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திய ரூ.1 கோடி மெமரி கார்டுகள் பறிமுதல்..!

0 comments




பாங்காக்கில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு ஒரு விமானம் புறப்பட்டு வந்தது. அதில் எலக்ட்ரானிக் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து அந்த விமானத்தில் வந்த பயணிகளை அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது டெல்லியை சேர்ந்த அசோக் ரத்தன் (56), பூஜா தல்வார் (30) ஆகியோரின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த சுங்க இலாகாவினர் அவர்களது சூட்கேஸ்களை சோதனை செய்தனர்.

அதில் பொருட்கள் எதுவும் இல்லை. எனவே, அவர்கள் இருவரையும் தனி அறைக்கு அழைத்து சென்று உடல் முழுவதும் தடவி பார்த்து பரிசோதித்தனர். அப்போது அவர்கள் இருவரும் தொடை முதல் பாதம் வரை நைலான் சாக்ஸ் அணிந்து அதற்குள் பிளாஸ்டிக் டேப் மூலம் 3ஜி மெமரி கார்டுகளை ஒட்டி கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதுபோன்று கடத்தி வரப்பட்ட 65 ஆயிரம் மெமரி கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ.1 கோடி, இது தொடர்பாக அசோக்ரத்தன், பூஜா தல்வார் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதில், அசோக்ரத்தன் டெல்லியில் துணிக்கடை நடத்தி வருவது தெரிய வந்தது. அதன் மூலம் போதிய வருமானம் இல்லாததால் கடத்தல் தொழிலில் இறங்கியதாக அவர் கூறினார். பூஜா தல்வார் இவரது துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.
--
என்றும் அன்புடன்
அப்துல் ஹமீது BIN சுல்தான் இப்ராஹிம்

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி