"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
11 பிப்ரவரி 2012

மருத்துவமனையில் நான் . . !!!

0 comments

அஸ்ஸலாமு அலைக்கும்...

துவண்டுப்போனச்

செல்களும்

சிலிர்த்து நிற்கும்;

என்னை நீ வயிற்றில்

உதைத்தத் தருணம்;

கலங்கியக் கண்ணீர்

காதை நிரப்ப;

உறவுகள் ஆறுதல்

உரைக்க;

மருத்துவமனையில் நான்!

மரணமோ என்னை;

வலியால் மிரட்ட;

யார் என அறியாத

மகப்பேறு மருத்துவர்கள்;

உன் வரவுக்காக

என் வழித்தடத்தை நோக்க;

வெட்கம் எனைக் கொல்ல;

உனக்காகதான் என

அழுகையால் எனக்கே

ஆறுதல் தழுவ;

அழகாய் நீ என் பக்கத்தில்

நான் மயக்கத்தில்!

கணக்கில்லா

முத்தத்தோடு வளர்ந்த நீ;

கணக்குப்பார்த்து எங்கள்

கணக்கை முடிக்க;

இன்று முதியோர் இல்லத்தில்

நானும் உன் தகப்பனும்!

அழுகை நேரம் போக;

உள்ளம் உன்னைதான் தேடும்;

உண்டாயா உறங்கினாயா என்று!


ஆக்கம் : - யாசர் அரஃபாத்

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி