"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
05 பிப்ரவரி 2012

சவூதியில் பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!

0 comments


பெண்களை கேலி செய்த வாலிபர் ஒருவருக்கு சவூதி ஷரியா நீதிமன்றம் விநோதமான தண்டனை வழங்கியுள்ளது.

சவூதியில் அல் ஐஸ் நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் பெண்களை கிண்டல் கேலி செய்துகொண்டிருந்த சவூதி வாலிபர் ஒருவரை நன்னெறிக் காவலர்கள் சிலர் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர். காவல்துறை அந்த வாலிபர் மீது ஷரியா நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தது. அந்த வாலிபர் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஷேக் ஹசன் பின் சாத் அல்காம்தி, அந்த வாலிபர் அந்நகரின் மரித்தார்கொல்லையை (இடுகாடு) துப்புரவு செய்யவும், மேலும் இறந்த மனிதர்கள் ஐவரின் உடலைக் குளிப்பாட்டவும் உத்தரவிட்டு இதுவே தண்டனை என்றும் தீர்ப்பளித்துள்ளார்.

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி