"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
06 பிப்ரவரி 2012

இப்படிக்கு உன் புதுமனைவி

0 comments
மணம் வீசும்
மணநாள் முடிந்தது;
மாதமே உன் விடுப்பு என்பதால்
விடைக்கொடுத்தாய்;
வலிக்கொடுத்தாய்!

களங்கிய மனமும்
கலங்கிய கண்ணும்;
விளங்கிய நீயும்
விலகிச் சென்றுவிட்டாய்!
இளமைக்கு
விலங்கிட்டு சென்றுவிட்டாய்!

குளமென நினைத்து
குளித்துக்கொண்டிருக்கும்
என் விழிகள் - வழிகள்
தெரியாததால் வழிமேல்
விழிவைத்துக் காத்துக்கொண்டிருக்கிறேன்
உன் வரவுக்காக;
வளைகுடாக் கொடுக்கும்
விடுப்பிற்காக!

நறுமணம் மாறா
தொங்கிக் கொண்டிருக்கும் உன்
மணநாள் சட்டை!
புன்முறுவலுடன் உன் நிழற்படங்கள்
புண்ணாகும் மனதிற்கு
நிழற்குடையாய்!

கைப்பேசியில் கதைகள்
நூறு அளந்தாலும்
தினம் அழுவாத நாளில்லை;
ஆறுதல் சொல்ல அருகில் நீயில்லை!

கத்தி அழமுடியாமல்
வத்திப்போன விழிகளைத்
தலையணையில்
பொத்தி அழுகிறேன்!
துக்கம் தொண்டையை அடைக்க
தூக்கமும் இமைகளை அணைக்க;
உறங்கப்போவேன் உறங்கிப்போவேன்!
என்னை அறியாமல்
என் அன்னை அறியாமல்!

இப்படிக்கு உன் புதுமனைவி!

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி