"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
08 மார்ச் 2012

இன்று08/03/2012 இன்று இரவு பயங்கர சூரிய புயல் பூமியை தாக்கும்

0 comments

மார்ச்,8- சூரியனில் அடிக்கடி புயல் ஏற்பட்டு வருகிறது. இன்று ஏற்படும் சூரிய புயல் பூமியை தாக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இன்று மாலையில் தொடங்கி நாளை காலைக்குள் இது பூமியை தாக்கலாம் என்று கணித்துள்ளனர். இது சக்தி வாய்ந்த புயலாக இருக்கும். எனவே இதன் தாக்குதலால் செயற்கை கோள்கள், மின் உற்பத்தி நிலையங்கள், தகவல் தொடர்புகள் போன்றவை பாதிக்கப்படலாம்.

விமாங்களுக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள். 1972-ம் ஆண்டு சக்தி வாய்ந்த சூரிய புயல் ஒன்று பூமியை தாக்கியது. அப்போது அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பகுதியில் தகவல் தொடர்பு சாதனங்கள் பாதிக்கப்பட்டன. இந்த புயலும் அதே போல சக்தி வாய்ந்தது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

மணிக்கு 40 லட்சம் மைல் வேகத்தில் சூரிய புயல் பூமியை நோக்கி வரும் என்று கணித்துள்ளனர். விமானங்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதால் புயல் தாக்கும் வாய்ப்புள்ள பகுதி வழியாக செல்ல வேண்டாம் என விமானங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி