"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
24 ஆகஸ்ட் 2011

புரியாதத் தருணம்...

0 comments
உணர்ச்சிகளின் சுரணையும்
அவ்வபோது செத்துப் போக;
இணையத்தில் நம்மை
இணைக்கக் கைப்பேசி அலற!

எல்லோரிடம் பேச
பாசமாகக் கைப்பேசியைக்
கொடு என்றாலும்;
விளங்காதக் குரலுக்கு
விளங்கியதுப்போல் ”ம்ம்” போட;

உனையன்றி யாருக்கும்
விளங்காத என் மொழி;
உறவினர்கள் எல்லாம்
முகம் சுளித்து – மீண்டும்
உன் கரம் திணித்து;
பேச்சு புரியவில்லை என்பர்;

VOIP என்று
பெயரிட்டாலும்
VOICE க்கு மட்டுமே
வாய்ப்பு;
மனதிற்கு என்றுமே
தீ வைப்பு!

ஆக்கம் : யாசர் அரஃபாத்
பதிப்பு : அதிரை FACT

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி