"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
13 டிசம்பர் 2011

தமிழில் அதிக மதிப்பெண் பெற +2 வழிகாட்டி...!

0 comments

சிறப்பாக படிக்கும் வழிமுறைகள்

தமிழில் தற்போது 199 மதிப்பெண் வரை சர்வ சாதாரணமாக வழங்கப்படுகிறது. வகுப்பில் தமிழ் பாடம் நடத்தும்போது, மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும்; புரிந்து படிக்க வேண்டும். பாடங்களை புரியாமல் மனப்பாடம் செய்யக் கூடாது. தமிழ் தானே என அலட்சியமாக இருக்கக்கூடாது.

தமிழில் அதிக மதிப்பெண் பெற, எழுத்து பிழையின்றி எழுத வேண்டும். கேள்விக்கு சம்மந்தம் இல்லாத பதில், கதைகளை எழுதக்கூடாது. தெளிவான கையெழுத்தில் தேர்வு எழுத வேண்டும்.

விடைத்தாளில் அடிக்கோடு இட, பச்சை மை, சிவப்பு மை, ஊதா மை ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது. இந்த மைகள், பேப்பர்களை திருத்தும் ஆசிரியர்கள், மேற்பார்வையாளர்கள் பயன்படுத்தக் கூடியவை. திணைக்கு நேரிடையாக வினா எழுத வேண்டும்.http://www.kalvikalanjiam.com

மனப்பாடம் பகுதி எழுதும்போது பாட்டு எழுத வேண்டும். பாவகை எழுதி விடக்கூடாது. எந்தந்த இடங்களில் கமா, புல் ஸ்டாப் வைக்க வேண்டும் என தெரிந்து, சரியாக வைக்க வேண்டும். அதை செய்ய தவறினால் மதிப்பெண் குறைந்து விடும் என்பதை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும்.

அதிக மதிப்பெண் பெற, படித்ததை அடிக்கடி திருப்பி பார்க்க வேண்டும். துணைப்பாடத்தில் முதல் ஐந்து பாடங்களை நன்றாக படிக்க வேண்டும் அல்லது ஐந்தாம் பாடத்தில் இருந்து 10ம் பாடம் வரை நன்றாக படித்துக் கொள்ள வேண்டும். தேர்வு எழுதி முடித்ததும் அவற்றை மீண்டும் திருப்பி பார்க்க வேண்டும். வினா எண் சரியாக எழுதி இருக்கிறோமா என சரி பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.

அதிகாலை சீக்கிரம் எழுந்து படிப்பது மிகவும் நல்லது; அப்போது, அவை மனதில் எளிதில் பதியும்.

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி