"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
08 ஜனவரி 2012

வேலைவாய்ப்பற்ற இளைஞர் உதவித்தொகை விண்ணப்பிக்க அழைப்பு !

0 comments

எஸ்எஸ்எல்சி தேர்ச்சி மற்றும் அதற்கு மேல் கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து 5 வருடங்களுக்கு மேலாக காத்திருக்கும் பதிவுதாரர்களுக்கு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.

இதற்கான விண்ணப்ப படிவங்களை தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக பெறலாம். கல்வித் தகுதியை பதிவு செய்து 5 வருடங்கள் முடிந்திருக்க வேண்டும். அதாவது 31.12.2006ம் தேதியிலும் அதற்கு முன்னதாக பதிவு செய்தவராக இருக்க வேண்டும். மனுதாரர் தனது வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையை தவறாது தொடர்ந்து புதுப்பித்து வந்திருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினத்தவர்கள் கடந்த 31ம் தேதியில் 45 வயதைக் கடந்தவராக இருக்கக் கூடாது. இதர வகுப்பினர் அதே போன்று 40 வயதைக் கடந்தவராக இருக்க கூடாது.
மனுதாரருடைய குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மனுதாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் கல்வி பயிலும் மாணவ, மாணவியராக இருக்க கூடாது. எனினும் தொலைத்தூரக் கல்வி பயில்பவராக இருக்கலாம். மனுதாரர் சுயமாக எவ்வித சுய தொழில் செய்பவராகவோ பணம் ஈட்டுபவராகவோ இருக்கக் கூடாது.
அனைத்து அலுவலக வேலை நாட்களில் தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பபடிவம் பெற பதிவு அட்டை, கல்விச் சான்றிதழ்கள், மாற்றுச்சான்றிதழ் ஆகிய அசல் ஆவணங்களுடன் வருகை தர வேண்டும். விவரம் அறிய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை வேலை நாட்களில் நேரில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குனர் கலைச்செல்வன் கேட்டுக்கொண்டுள்ளார்.
Source : காலை நாளிதழ்

Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி