"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) "
22 பிப்ரவரி 2012

மாற்றுத்திறனாலி ஐ.ஏ.எஸ். IAS தேர்வில் சாதனை !!

0 comments

அரியானா மாநிலம், மகேந்தர்கார் மாவட்டம் கெர்ரி கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித் குமார், 32. ஐந்து வயதில் இவருக்கு ஏற்பட்ட வயிற்றுப்போக்கின் காரணமாக, இவரது இரண்டு விழிகளும் பார்வைத் திறனை இழந்தன.

இதனால், இவர் வழக்கமான பள்ளிக்கூடத்துக்கு செல்ல முடியாமல் வீட்டில் இருந்தார். உள்ளூர் சாமியார் ஒருவரின் வற்புறுத்தலால், டில்லியில் உள்ள விழியிழந்தோர் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

டில்லி கரோல்பாக் பள்ளியில் இவர் 9 மற்றும் 10ம் வகுப்பில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். டில்லி, ராம்ஜாஸ் கல்லூரியில் அரசியல் விஞ்ஞானத்தில் ஹானர்ஸ் பட்டம் பெற்ற அஜித்குமார், பி.எட்., படித்து முடித்து, கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றினார்.

சமீபத்தில் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்ற அஜித்குமார்,ஐ.ஏ.எஸ்.,அதிகாரி பயிற்சிக்காக உத்தரகண்ட் மாநிலம் முசோரிக்கு நாளை மறுநாள் பயணமாகிறார்.


Leave a Reply

Post a Comment

நாங்கள் உங்கள் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளிக்கிறோம். உங்கள் பதிவுகள் அவசியமானதே! நீங்கள் தேவையற்ற பதிவுகளை பதிந்தால் நிக்க்விடுவோம். பதியும்போது அல்லாஹ் நம்மைக் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மனதில் கொள்ளவேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாமல் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள். கற்பவராக இரு! -அல்லது கற்று கொடுப்பவனாக இரு! -அல்லது. கற்பவருக்கு உதவுபவனாக இரு! - நபி மொழி